×

கோயில் திருவிழாவில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்

 

சிங்கம்புணரி: சிங்கம்புணரி காளியம்மன் கோயில் திருவிழாவில் சிறுவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிங்கம்புணரியில் திருப்பத்தூர் சாலை உப்பு செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்கினி சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேடமணிந்து, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலையில் முளைப்பாரி அக்கினி சட்டியை செட்டியார் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயில் திருவிழாவில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Singhamburi ,Singhamburi Kalliyamman temple festival ,The Temple Festival ,
× RELATED கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்